Published : 02 Jun 2015 08:05 AM
Last Updated : 02 Jun 2015 08:05 AM

இடைத்தேர்தல் தொடர்பாக அனைத்து மாவட்டச் செயலாளர்களுடன் விஜயகாந்த் தீவிர ஆலோசனை: தேர்தலில் தேமுதிக போட்டி?

சென்னை ஆர்.கே. நகர் சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேமுதிக மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார்.

சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவை தொகுதிக்கு வரும் 27-ம் தேதி தேர்தல் நடக்க வுள்ளது. அந்த தொகுதி யில் அதிமுக வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டி யிடவுள்ளார்.

இந்த இடைத்தேர்தலை புறக் கணிப்பதாக திமுக, விசிக, பாமக, மதிமுக கட்சிகள் அறிவித்துள்ளன. பாஜக, காங் கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டொரு நாளில் முடிவினை அறிவிப்பதாக கூறி யுள்ளன.

இந்த சூழலில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? இல்லை புறக்கணிப்பதா? என்பதை முடிவு செய்வதற்காக தேமுதிக மாவட்டச் செயலாளர்களுடன் விஜயகாந்த் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இடைத்தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர்களின் கருத்துக்களை விஜயகாந்த் கேட்டறிந்தார்.

ரகசியமாக நடந்தது

நேற்றைய கூட்டம் பற்றிய தகவலை மாவட்டச் செயலாளர் களுக்கு கடந்த சனிக்கிழமை அன்றுதான் விஜயகாந்த் தெரிவித்தார். இந்தக்கூட்டத்தை அவர் மிகவும் ரகசியமாக நடத்தியது குறிப்பிடத்தக்கது. மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, நேற்று மாலை தேமுதிக உயர்மட்டக்குழு உறுப்பினர் களுடனும் விஜயகாந்த் ஆலோ சனை நடத்தினார். இதன் பேரில் ஆர்.கே.நகர் இடைத்தேர் தலில் தேமுதிக போட்டியிடுமா? என்பது பற்றி இன்று அல்லது நாளைக்குள் விஜயகாந்த் தனது அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x