Published : 11 Jun 2015 07:50 AM
Last Updated : 11 Jun 2015 07:50 AM
சென்னை குரோம்பேட்டை லட்சுமி புரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். குரோம்பேட்டை சி.எல்.சி. சாலை யில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் மையத் தில் காவலாளியாக வேலை பார்க்கிறார். நேற்று காலை 6 மணியளவில் அந்த பகுதியில் உள்ள 70 அடி உயர செல்போன் கோபுரத்தின் மீது ஆறுமுகம் ஏறினார். பின்னர் அதன் உச்சியில் நின்றுகொண்டு, “தமிழகத்தில் பூரண மது விலக்கு கொண்டு வர வேண்டும்” என்று கோஷமிட்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீ ஸார் விரைந்து வந்து அவரை கீழே இறங்குமாறு கூறினர். அவர் இறங்காததால் 2 தீயணைப்பு வீரர்கள் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி அவரிடம் பேசி கீழே இறக்கி கொண்டுவந்தனர்.
ஆறுமுகம் கீழே இறங்கிய பிறகுதான் அவர் போதையில் செல் போன் கோபுரத்தின் மீது ஏறியது தெரியவந்தது. ஆறுமுகத்தை எச்சரித்த போலீஸார், அவரது மகனை வரவழைத்து அவருடன் அனுப்பி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT