Published : 27 Jun 2015 08:53 AM
Last Updated : 27 Jun 2015 08:53 AM

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இல்லை: தேமுதிக சார்பில் 29-ம் தேதி திருவாரூரில் ஆர்ப்பாட்டம் விஜயகாந்த் தலைமையில் நடக்கிறது

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வழங்காதது உள்ளிட்ட விவசாயிகள் பிரச்சினைகளை கண்டித்து தேமுதிக சார்பில் அதன் தலைவர் விஜயகாந்த் தலைமையில் திருவாரூரில் வரும் 29-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.

இது தொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் வெளி யிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

குறுவை சாகுபடிக்காக ஜுன் 12-ம் தேதி மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடவில்லை. விவசாயிகளுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது. எனவே, அவற்றை கண்டித்து தேமுதிக சார்பில் திருவாரூரில் வரும் 29-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இந்த ஆர்ப் பாட்டத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கவுள்ளார். இதில் தேமுதிக வினர், டெல்டா விவசாயிகள், பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x