Published : 12 Jun 2015 08:47 AM
Last Updated : 12 Jun 2015 08:47 AM

கருத்துக்கணிப்புக்கு தடை

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தேர்தல் ஆணைய விதிகள்படி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்கும் 27-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரை, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்துதல், முடிவுகளை அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் வெளியிடுதல் ஆகியவை தடை செய்யப்படுகிறது. மேலும், வாக்குப்பதிவு முடிந்து 48 மணி நேரத்துக்கு கருத்துக்கணிப்பு முடிவுகள் மற்றும் வேறு ஏதேனும் வாக்கு தொடர்பான கணிப்புகளை மின்னணு ஊடகங்களில் வெளியிடுவது தடை செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x