Published : 03 Jun 2015 10:44 AM
Last Updated : 03 Jun 2015 10:44 AM

நாளை முதல் எஸ்எஸ்எல்சி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம்

எஸ்எஸ்எல்சி தற்காலிக மதிப்பெண் சான்றிதழை நாளை முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு தேர்வுத் துறையின் இணை இயக்குநர் (பணியாளர்) கே.தேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த எஸ்எஸ்எல்சி தேர்வை எழுதிய மாணவர்களுக்கும், தனித் தேர்வர்களுக்கும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் மே 29-ந் தேதி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

இந்நிலையில்,வியாழக்கிழமை (நாளை) முதல் மாணவர்கள் தாங்களே தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தேர்வுத்துறையின் இணையதளத்தில் ( >www.dge.tn.nic.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த இணையதளத்துக்குள் சென்று தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துவிடலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x