Published : 01 Jun 2015 07:17 AM
Last Updated : 01 Jun 2015 07:17 AM
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் காரணமாக கோயம்பேடு ஆலந்தூர் இடையிலான மெட்ரோ ரயில் சேவை ஜூலை மாதத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கோயம்பேடு ஆலந்தூர் வரையில் மெட்ரோ ரயில்களை இயக்க பாதுகாப்பு ஆணையர் மிட்டல் தலைமையிலான குழுவினர் ஒப்புதல் அளித்துள்ளனர். இதையடுத்து, ரயில் சேவையை தொடங்குமாறு கடந்த புதன்கிழமையன்று தமிழக அரசிடம் நேரில் சென்று வலியுறுத்தினோம். இது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இருப்பினும் ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளதால், மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் தேதி ஜூலை மாதத்துக்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT