Published : 13 Jun 2015 10:55 AM
Last Updated : 13 Jun 2015 10:55 AM

3 தேர்வு முடிவுகள்: டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுப்பணியில் அடங்கிய உதவி பணி மேலாளர் பதவியில் 8 காலியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 1.11.2014 அன்றும், தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை சார்நிலைப் பணியில் செயல் அலுவலர் (கிரேடு-4) பதவியில் 23 காலியிடங்களை நிரப்ப 16.11.2013 அன்றும், கால்நடை பராமரிப்பு சார்நிலைப் பணியில் அடங்கிய புள்ளியியல் ஆய்வாளர் பதவியில் 6 காலியிடங்களை நிரப்புவதற்காக 11.10.2014 அன்றும் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

இத்தேர்வுகளின் முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த கட்ட தேர்வான நேர்காண லுக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதா ரர்களின் பதிவெண்களை இந்த இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x