Published : 27 Jun 2015 03:28 PM
Last Updated : 27 Jun 2015 03:28 PM

ஜூன் 29-ம் தேதி 7 ரயில்கள் ரத்து

சென்னை சென்ட்ரல் - டெல்லி ஜிடி விரைவு ரயில் உட்பட 7 ரயில்கள் நாளை மறுநாள் (ஜூன் 29-ம்) தேதி ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லி செல்லும் ஜிடி விரைவு ரயில் ரத்து செய்யப்படுகிறாது. அதேபோல், மறுமார்க்கத்தில் டெல்லி - சென்னை சென்ட்ரல் ஜிடி விரைவு ரயிலும் ரத்தாகிறது.

சப்ரா - சென்னை சென்ட்ரல், லக்னோ - சென்னை சென்ட்ரல், ஜம்மு தாவி - கன்னியாகுமரி/ நெல்லை விரைவு ரயில், இந்தூர்- திருவனந்தபுரம், யஷ்வந்தூர் - பாடலிபுத்ரா (வழி: சென்னை செண்ட்ரல்) விரைவு ரயில்களும் ரத்தாகின்றன.

மத்தியப் பிரதேச மாநிலம் இட்டார்சி ரயில் நிலையத்தில் கடந்த 17-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதால், அந்த வழியாக செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. பல ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்படுகின்றன. தெற்கு ரயில்வேயும் பல விரைவு ரயில்களை ரத்து செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x