Published : 06 Jun 2015 08:52 AM
Last Updated : 06 Jun 2015 08:52 AM
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மனைவி ஜீவா வேலு ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.21.31 லட்சம் சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு, கடந்த 21-03-2012 அன்று வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என்று கூறி, தங்களை விடுவிக்கக் கோரி இருவரும் தனித்தனியே மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்கள் மீது, திருவண்ணாமலை முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் போதிய ஆவணங்களை சமர்பிக்க தவறியதால், வழக்கில் முகாந்திரம் இல்லை என்று கூறி, எ.வ.வேலு மற்றும் ஜீவா வேலு ஆகியோரை வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி அறிவொளி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT