Published : 26 Jun 2015 10:36 AM
Last Updated : 26 Jun 2015 10:36 AM

நெருக்கடி நிலை மீண்டும் வரக்கூடாது: கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் நெருக்கடி நிலை 1975 ஜூன் 25-ல் பிரகடனப்படுத்தப்பட்டது. நெருக்கடி நிலை போன்ற இருண்ட காலம் மீண்டும் வராது என்று உறுதியாக கூறமுடியாது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அரசின் அமைச்சர்கள் மீது அக்கட்சியினரின் விமர்சனம் அதிகம் உள்ளது. இதை பார்க்கும்போது நாட்டில் மீண்டும் அவரச நிலை வருமோ என்ற அச்சம் எழுகிறது.

நாட்டில் இருண்ட காலம் மீண்டும் வரக்கூடாது. அதற்கு ஜனநாயகத்தைக் காக்க மக்கள் எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x