Published : 12 Jun 2015 08:52 AM
Last Updated : 12 Jun 2015 08:52 AM

விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி

சென்னை விமான நிலையத்தில் கணினி இயக்கும் வேலை வாங்கி தருவதாக கூறி, பெருநகரைச் சேர்ந்த ஒருவர் ரூ.8.7 லட்சம் மோசடி செய்துவிட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வேலூரை சேர்ந்த இளைஞர்கள் புகார் அளித்தனர்.

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தைச் சேர்ந்தவர்கள் சதீஷ்குமார். காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகரை சேர்ந்த மணி என்பவரது மகன் முருகன். இவர்கள் இருவரும் காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் தனியார் கல்லூரியில் படித்துள்ளனர்.

இந்நிலையில், விமான நிலை யத்தில் கணினி இயக்கும் பிரிவில் வேலை வாங்கி தருவதாக சதீஷ்கு மாரிடம், முருகன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, சதீஷ்குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் 13 பேர் தலா 40 முதல் 50 ஆயிரம் என மொத்தம் 8.76 லட்சம் ரூபாயை முருகனிடம் கடந்த ஆண்டு வழங்கியதாக கூறப்படுகிறது.

பணத்தை பெற்றுகொண்டு ஓராண்டு ஆகியும் வேலை வாங்கி தராமல் முருகன் ஏமாற்றி விட்டதாக, சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேற்று புகார் மனு அளிக்க வந்தனர். குற்றப்பிரிவு போலீஸார் புகார் மனுவை பெற்றுக்கொண்டு, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x