Published : 24 Jun 2015 07:23 AM
Last Updated : 24 Jun 2015 07:23 AM

ஜெயலலிதாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் வேண்டுகோள்

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்துள்ள நிலையில் நல்ல முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் வகையில் முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. ஜெயலலிதாவை விடுதலை செய்து உத்தரவிட்ட கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசு கோரியுள்ளது.

ஒருவேளை இடைக்கால தடை விதிக்கப்பட்டால், ஜெயலலிதா மீண்டும் முதல்வர் பதவியை இழப்பதுடன், ஆர்.கே.நகரில் மீண்டும் ஒரு இடைத்தேர்தல் வரக்கூடும். இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை நல்ல முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் வகையில் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x