Published : 02 Jun 2015 07:30 AM
Last Updated : 02 Jun 2015 07:30 AM

சென்டாக்: விண்ணப்பிக்க ஜூன் 5 வரை அவகாசம்

மருத்துவம், பொறியியல் படிப்புக்களுக்கான சென்டாக் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 5-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்டாக் தரப்பில் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் காலதாமதமாக வெளியிடப்பட்டதால் மாணவர்கள் உரிய காலத்துக்குள் இணையதளம் மூலமாக சென்டாக் விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியவில்லை. இதனால் காலநீட்டிப்பு செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வந்தன. எனவே 2-ம் தேதி (இன்று) இரவு 12 மணி முதல் 4-ம் தேதி வரை இணையத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம். வரும் 5-ம் தேதி மாலை விண்ணப்பங்களை நேரில் வந்து அலுவலகத்தில் தரலாம்.

இக்காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x