Published : 21 Jun 2015 09:13 AM
Last Updated : 21 Jun 2015 09:13 AM

ஆர்.கே.நகரில் நாளை ஜெயலலிதா பிரச்சாரம்: ஏற்பாடுகள் தீவிரம்

ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா நாளை (22-ம் தேதி) பிரச்சாரம் செய்கிறார். அதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் தீவிரமாக கவனித்து வருகின்றனர்.

சென்னை ஆர்.கே. நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அமைச்சர்கள், அதிமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகி கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக வேட்பாளரான முதல்வர் ஜெயலலிதா, ஆர்.கே.நகரில் நாளை பிரச்சாரம் செய்யவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் அமைச்சர்கள் முன்னிலையில் தீவிரமாக நடந்து வருகின்றன. முதல்வரின் பிரச்சாரம் குறித்து ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, கே.சி.வீரமணி, செல்லூர் கே.ராஜு, பி.தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் தண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் பணிமனையில் நேற்று ஆலோசனை நடத்தினர்.

ஜெயலலிதா தனது பிரச்சாரத்தின்போது திருவொற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்பு, எண்ணூர் நெடுஞ்சாலை சந்திப்பு ஆகிய 2 இடங்களில் பேசுகிறார். இந்த இடங்களை மூத்த அமைச்சர்கள் பார்வையிட்டனர். சேலத்தில் இருந்து 2 லாரிகளில் நூற்றுக்கும் அதிகமான ஸ்பீக்கர்கள் நேற்று மதியம் திருவொற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்பில் கொண்டு வந்து இறக்கப்பட்டன. சாலையை சுத்தப்படுத்துதல், சாலையோர கடைகளை அப்புறப்படுத்துதல் போன்ற பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x