Published : 13 Jun 2015 10:11 AM
Last Updated : 13 Jun 2015 10:11 AM

தமிழ் மாநில காங்கிரஸில் சென்னை மாவட்டம் 8 ஆக பிரிப்பு: மேலும் சில நிர்வாகிகள் நியமனம்

தமாகாவில் சென்னை மாவட்டம் 8 - ஆக பிரிக்கப்பட்டுள்ளது. கட்சியில் மேலும் சில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டத் தலைவர்களின் விவரம் வருமாறு :

மத்திய சென்னை கிழக்கு செளந்தர் முருகன், மத்திய சென்னை மேற்கு ஜி.ஆர்.கதிரவன், வட சென்னை தெற்கு சி.ராஜ்குமார், வட சென்னை கிழக்கு பிஜூ சாக்கோ, வட சென்னை மேற்கு அருண்குமார், தென் சென்னை வடக்கு இல.பாஸ்கர், தென் சென்னை கிழக்கு கொட்டிவாக்கம் முருகன், தென் சென்னை மேற்கு இ.சி.சேகர். கன்னியாகுமரி மேற்கு ஜான் ஜேக்கப் எம்.எல்.ஏ.

மாநில நிர்வாகிகள்

ஜி.பி.நம்பி, ஜவஹர் பாபு, அனுராதா அபி உள்ளிட்ட 14 செயலாளர்கள், கல்யாணி, ஏ.டி.சத்யா உள்ளிட்ட 7 இணைச் செயலாளர்கள், சூளை பிரகாசம், எல்.கே.வெங்கட் உள்ளிட்ட 7 கொள்கை பரப்புச் செயலாளர்கள் என மேலும் 28 மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜான் ஜேக்கப் கன்னியா குமரி மேற்கு மாவட்டத் தலைவராக நியமிக் கப்பட்டுள்ளார். எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்துடன் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக கோவை மாநகர் மாவட்டத்துக்கு இதுவரை மாவட்டத் தலைவர் நியமிக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x