Published : 23 Jun 2015 07:30 AM
Last Updated : 23 Jun 2015 07:30 AM
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை முன்னிட்டு விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் கடந்த 19-ந் தேதி வெளியிடப்பட்டது. கல்லூரியை தேர்வுசெய்வதற்கான பொது கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது. இதற்கிடையே, விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு 28-ம் தேதியும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 29-ம் தேதி அன்றும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
26-ம் தேதி வரை
பிஇ, பிடெக். படிப்புகளில் விளையாட்டுப்பிரிவின் கீழ் 500 இடங்கள் உள்ளன. இதற்கு 1,850 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 26-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT