Published : 06 Jun 2015 07:45 AM
Last Updated : 06 Jun 2015 07:45 AM

ஆர்கே நகரில் இதுவரை 15 பேர் மனு தாக்கல்

ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்த லில் போட்டியிட நேற்று வரை 15 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் டிராஃபிக் ராமசாமி, கே.பத்மராஜன் உட்பட 5 பேர் மனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் நேற்று காலை 11 மணிமுதல் மாலை 3 மணி வரை 10 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

பிற்பகல் 2 மணிக்கு அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதாவும், அதிமுக மாற்று வேட்பாளர் இ. மதுசூதனனும் மனுக்களை தாக்கல் செய்தனர். இவர்களைத் தவிர சுயேச்சை வேட்பாளர்களாக இ.ராமதாஸ், எஸ்.கே.மனோகரன், ஏ.வெங்கடேஷ், எம்.வசந்தகுமார், பி.குமாரசாமி, ஜே.மோகன்ராஜ், ஐ. அப்துல் வாகித், பி.மாரிமுத்து ஆகியோர் மனுதாக்கல் செய்த னர். மது ஒழிப்பு தொடர்பாக போராட்டம் நடத்தி வரும் சசிபெருமாள் வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக வந்தார். ஆனால் வேட்பு மனுதாக்கலுக்கான நேரம் முடிந்ததால் அவர் திரும்பிச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x