Published : 15 Jun 2015 07:35 AM
Last Updated : 15 Jun 2015 07:35 AM
இடைத்தேர்தல் நடக்கவுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தெரிவித்துள் ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். அதிமுக ஆட்சியின் சாதனைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்து வருகின்றனர்.
தண்டையார்பேட்டை சபாபதி தெருவில் நேற்று ஆயிரத்துக்கும் அதிகமான தொண்டர்கள், முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை (மாஸ்க்) முகத்தில் அணிந்து கொண்டு இரட்டை இலை சின்னத்தை காட்டியபடி வாக்கு சேகரித்தனர்.
கொருக்குப்பேட்டையில் மாலை 5 மணி அளவில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மற்றும் அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
அப்போது நிருபர்களிடம் மதுசூதனன் கூறும்போது, ‘‘ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறு வார்.
வரும் 21-ம் தேதி தொகுதியில் முதல்வர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT