Published : 27 May 2015 07:46 AM
Last Updated : 27 May 2015 07:46 AM
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய தரும சாலையின் 149-வது ஆண்டு தொடக்க விழா நேற்று நடை பெற்றது. விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
வடலூரில் 1867-ம் ஆண்டு சத்திய தரும சாலையை வள்ள லார் நிறுவினார். அன்று முதல் தினமும் மூன்று வேளையும் இங்கு அன்னதானம் வழங்கப்பட்டு வரு கிறது.
1867-ம் ஆண்டில் வள்ளலார் ஏற்றி வைத்த அடுப்பு இன்று வரை அணையாமல் எரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு, பொதுமக்கள் தானமாக வழங்கும் பொருட்களை கொண்டே சமை யல் செய்து அன்னதானம் வழங் கப்பட்டு வருகிறது.
வள்ளலார் நிறுவிய இந்த சத்திய தரும சாலையின் 149-வது ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலையில் அகவல் பாராயணம் பாடப்பட்டது. பின்னர், தரும சாலை வளாகத்தில் சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தரும சாலை மேடையில் சொற்பொழிவுகளும், காலை முதல் இரவு வரை இடைவிடாமல் சிறப்பு அன்னதானமும் நடை பெற்றன. விழா ஏற்படுகளை நிர்வாக அதிகாரி சிவஞானம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT