Published : 25 May 2015 11:18 AM
Last Updated : 25 May 2015 11:18 AM

ஜூன் 2-வது வாரத்தில் தமிழக விவசாயிகளை சந்திக்கிறார் ராகுல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தகவல்

ஈரோட்டில் நேற்று செய்தியாளர் களிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மேல்முறையீடு செய்யப்படும். தீர்ப்பு தொடர்பாக நான் தெரிவித்து வரும் கருத்துக்கு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டால் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன்.

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்படவுள்ள நிலையில், அவசர அவசரமாக ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றது அரசியல் சாசனத்துக்கு விரோத மானது.

ஜூன் 2 வது வாரத்தில் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளார். அவரது வருகையின்போது, தமிழக விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்கிறார். தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் திருமண பத்திரிகை கொடுத்தது அரசியல் முக்கியத்துவம் இருப்பதாக நான் கருதவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x