Last Updated : 25 May, 2015 11:28 AM

 

Published : 25 May 2015 11:28 AM
Last Updated : 25 May 2015 11:28 AM

விழுப்புரம்: கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவிகள் பலி

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழந்தனர்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே நெமிலி கிராமத்தில் வசிப்பவர் குமார் என்பவர் மகள் அனு (16). அதே மாவட்டத்தின் ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகள் சுவேதா (12). இவர்கள் இருவரும் உறவினர்கள். கோடை விடுமுறைக்காக சுவேதா அனுவின் வீட்டுக்கு வந்திருந்தார்.

இன்று காலை குளிப்பதற்காக அருகில் உள்ள கல்குவாரியில் உள்ள குட்டைக்கு இருவரும் சென்றனர். குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக குட்டையில் உள்ள சேற்றில் சிக்கி இருவரும் உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த வானூர் தீயணைப்பு துறையில் 2 மணி நேரம் போராடி மாணவிகள் சடலத்தை மீட்டனர். இறந்த மாணவிகளின் உடல் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வானூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x