Published : 28 May 2015 08:23 AM
Last Updated : 28 May 2015 08:23 AM

சர்ச் இடிந்து விபத்து

திருநெல்வேலி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள சேவியர் காலனியில் செயிண்ட் பீட்டர் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. 3 மாடிகள் கொண்டதாக இந்த ஆலயம் கட்டப்படுகிறது.

நேற்று இரவு 9 மணியளவில் இங்கு 25-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் முதல்தளத் துக்கான செண்ட்ரிங் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதிதாக கட்டப்படும் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட வர்கள் அலறினர். தீயணைப்பு படையினரும், போலீஸாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இரவு 9.30 மணி வரை 7 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். 10-க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடு களுக்குள் ஆபத்தான நிலையில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x