Published : 30 May 2015 08:11 AM
Last Updated : 30 May 2015 08:11 AM

தோட்டக்கலைத் துறை பண்ணைக்கு அளித்த நிலத்தை திருப்பித் தர கிராம மக்கள் போராட்டம்

காஞ்சிபுரத்தை அடுத்த களக் காட்டூர் அருகேயுள்ள தோட்டக் கலைத் துறை பண்ணைக்கு அளித்த ஊராட்சி நிலத்தை, மீண்டும் ஊராட்சியிடமே திருப்பி அளிக்க வலியுறுத்தி கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

களக்காட்டூரில் அரசு தோட்டக் கலைத் துறை பண்ணை 40 ஏக்கரில் அமைந்துள்ளது. இதன ருகே இருந்த மேய்ச்சல் புறம் போக்கு நிலத்தை, கடந்த 1972-ல் அப்போதைய கிராம ஊராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி வேளாண் துறைக்கு வழங்கியது.

இதனிடையே, களக்காட்டூர் அரசுப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் மற்றும் பழுதடைந்த வேளாண் கிடங்குக்கு புதிய கட்டிடம் கட்டு வதற்கு ஊராட்சியில் நிலம் இல்லா ததால், கிராம வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தோட்டகலைத் துறைக்கு வழங்கப்பட்ட நிலத்தில் பயன்படுத்தப்படாத- மேய்ச்சல் புறம்போக்கு நிலம் சர்வே எண் 313, 318 ஆகியவற்றை ஊராட்சி நிர்வாகத்திடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியரிடம் களக்காட்டூர் கிராம மக்கள் மனு அளித்தனர்.

இந்த நிலையில், அரசு தோட்டக் கலைத் துறை பண்ணைக்கு வழங்கப்பட்ட இடத்தில் சுற்றுச் சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வரும் கல்வியாண்டில் ஊராட்சி நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்த ஊராட்சி நிர்வாகம் காப்புத்தொகை செலுத்தவுள் ளதால், சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பள்ளிக் கட்டிடத்துக்காக குறிப் பிட்ட நிலத்தை ஊராட்சி நிர்வாகத் திடமே மீண்டும் ஒப்படைக்குமாறு வலியுறுத்தியும் களக்காட்டூர் கிராம மக்கள் 100-க்கும் அதிகமா னோர் காஞ்சிபுரம்- உத்திரமேரூர் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட முயன்றனர்.

காஞ்சி தாலுகா மற்றும் மாகரல் போலீஸார், காஞ்சிபுரம் ஒன்றியக் குழுத் தலைவர் ஜீவாநந்தம் ஆகியோர் கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்று அறிவுறுத்தப்பட்டதையடுத்து, காஞ்சிபுரம் வருவாய்க் கோட்டாட்சி யரிடம் மீண்டும் மனு அளிக்க முடிவு செய்து, போராட்டத்தைக் கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x