Published : 27 May 2015 07:47 PM
Last Updated : 27 May 2015 07:47 PM

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியாகிறது

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 28-ம் தேதி (நாளை) வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 25-ம் தேதி வெளியான நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 27-ம் தேதி வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ முதலில் அறிவித்திருந்தது. பின்னர் அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 28-ம் தேதி (நாளை) வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. தேர்வு முடிவுகளை www.cbseresults.nic.in என்ற இணையதளத்தில் காலை 10 மணியளவில் தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x