Published : 30 May 2015 07:59 AM
Last Updated : 30 May 2015 07:59 AM
வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருக்கும் கத்தரி வெயில் காலம் நேற்றுடன் முடிந்து விட்டது. இதற்கு பிறகு வெயில் குறையும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
கத்தரி வெயிலின் கடைசி நாளான நேற்று சென்னையில் மீண்டும் வெயில் அதிகமாக காணப்பட்டது. நுங்கம்பாக்கத்தில் 38.6 டிகிரியும் மீனம்பாக்கத்தில் 40.3 டிகிரியும் நேற்று பதிவாகியது. ஆனால் கோவை, குன்னூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் லேசான மழை பெய் திருந்தது.
தென்மேற்கு பருவ மழை
தென்மேற்கு பருவ மழை இன்று (மே 30)தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
பருவ மழை தொடங்கா விட்டாலும், அடுத்த இரண்டு நாட்களில் பெரும்பாலான இடங்களில் மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT