Published : 30 May 2015 03:54 PM
Last Updated : 30 May 2015 03:54 PM

சேலம், கிருஷ்ணகிரியில் வெவ்வேறு சாலை விபத்துகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 6 பேர் பலி

சேலம் அருகே சங்ககிரியில் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும், காவேரிப் பட்டணம் அருகே கார் மீது மினி லாரி மோதியதில் வடமாநிலத்தைச் சேர்ந்த கணவன்- மனைவி உட்பட 3 பேர் பலியானார்கள்.

ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து சங்ககிரி நோக்கி மாருதி கார் நேற்று வந்து கொண்டிருந்தது. இந்தக் காரை கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் பேபா பகுதி யைச் சேர்ந்த சரவணன்(35) ஓட்டி வந்தார். காரில் அவரது மனைவி சோபா(27), அவர்களது மகள் ஜீவிதா(7) இருந்தனர். உடுமலைபேட்டையில் உள்ள சோபாவின் சித்தி வீட்டில் விடு முறையை கழித்துவிட்டு, மீண்டும் இவர்கள் காரில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். சங்ககிரி - குப்பனூர் பைபாஸ் சாலையில் கார் சென்றபோது, சாலையோரம் நின்ற லாரியின் பின்புறம் கார் மோதியது. இதில் கார் நொறுங்கி சரவணன், சோபா, ஜீவிதா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந் தனர்.

தகவலறிந்த சங்ககிரி டி.எஸ்.பி ரெஜினா பேகம், காவல் ஆய்வாளர் கிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மூன்று பேரின் உடல்களை மீட்டு, சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவேரிப்பட்டணத்தில் விபத்து

ராஜஸ்தான் மாநிலம் நாகூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் ஜெயின்(38), லக்னோவில் உள்ள உர கம்பெனியில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சபிதா ஜெயின்(35). இவர்களது மகன்கள் சித்தா ஜெயின்(9), மனோ ஜெயின்(6).

சில தினங்களுக்கு முன் சேலத் தில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்திருந்த மனோஜ் ஜெயின், நேற்று காலை காரில் ஊருக்கு புறப்பட்டனர். காரை வெங்கடேஷ்(40) ஓட்டிச் சென்றார். கிருஷ்ணகிரி மாவட் டம் காவேரிப்பட்டணத்தில் கார் சென்றபோது, தேசிய நெடுஞ் சாலையில் ஓசூரில் இருந்து சிவகங்கை நோக்கி தக்காளி ஏற்றிச் சென்ற மினி லாரியும் காரும், நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சபிதா ஜெயின், ஓட்டுநர் வெங்கடேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மனோஜ் ஜெயின், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந் தார். 2 குழந்தைகளும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மினி லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x