Published : 29 May 2015 09:02 AM
Last Updated : 29 May 2015 09:02 AM

ஜூன் 1-ம் தேதி முதல் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறாது: சென்னை ஆட்சியர் அறிவிப்பு

சென்னை ஆர்.கே. நகர் பகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள தால் தேர்தல் நடத்தை விதிமுறை யின் காரணமாக வரும் ஜூன் 1-ம் தேதி முதல் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்தி:

இந்திய தேர்தல் ஆணையம் சென்னை மாவட்டத்தில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே. நகர்) சட்டமன்ற தொகு திக்கு வரும் ஜூன் 27-ம் தேதி இடைத் தேர்தல் அறிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து ஜூன் 26-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ஆகவே சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் நடைபெறாது. இந்த நடவடிக்கை தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வரும் வரை நீடிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x