Published : 29 May 2015 09:05 AM
Last Updated : 29 May 2015 09:05 AM

செல்போன் கடை ஊழியர் கொலை: கல்லூரி மாணவர் கைது; மற்றொருவருக்கு வலை

சென்னை அமைந்தகரை மேத்தா நகர் சதாசிவம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு வீட்டில் கல்லூரி மாணவர்கள் 4 பேர் வசித்தனர். அவர்களில் 2 பேர் சில நாட்களுக்கு முன்பே அறையில் இருந்து வெளியேற, வேலூரை சேர்ந்த சக்திவேல் (20), தருமபுரியை சேர்ந்த ஸ்டீவ் (20) ஆகிய இருவர் மட்டும் இருந்தனர். கடந்த 3 தினங்களாக நண்பர்கள் இருவரும் வீட்டுக்கு வரவில்லை.

இந்நிலையில் நேற்று காலையில் மாணவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. தகவலின் பேரில், அமைந்தகரை போலீஸார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு குளியல் அறையில் கை, கால்கள் கட்டப்பட்டு தலையில் பலத்த காயங் களுடன் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இறந்து கிடந்தார்.

போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக் கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சக்திவேல், ஸ்டீவ் இருவரை யும் பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டது. இந்நிலையில் நேற்று இரவில் சக்திவேலை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப் பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் வேலூர் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த சையது (21) என்பது தெரியவந்தது. அவர் ஒரு செல்போன் கடையில் வேலை செய்துவந்தார். சிறிய அளவில் தொழில் செய்வதற்காக குறைந்த விலையில் செல்போன்களை வாங்கித் தருமாறு சையதுவிடம் சக்திவேலும், ஸ்டீவும் ரூ.2 லட்சம் பணத்தை கொடுத்தனராம். ஆனால் அவர் அந்த பணத்தை ஏமாற்றிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து சையதுவை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். ஸ்டீவை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x