Published : 29 May 2015 09:11 AM
Last Updated : 29 May 2015 09:11 AM

பெரிய காஞ்சிபுரத்தில் தீ விபத்து: 20 குடிசை வீடுகள் எரிந்து நாசம்

பெரிய காஞ்சிபுரம் பகுதியில் தர்கா அருகே அமித்அவுலியா நகர் அமைந்துள்ளது. இங்கு, வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலத்தில் இஸ்லாமிய சமுதாய த்தைச் சேர்ந்த மக்கள், 30-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், மின்கசிவு காரண மாக குடிசை வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், 20-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளில் தீப்பற்றியது. தகவல் அறிந்த காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நகராட்சி தண்ணீர் லாரியும் தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. சுமார் ஒருமணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. விபத்து குறித்து, சிவகாஞ்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x