Published : 26 May 2015 07:25 AM
Last Updated : 26 May 2015 07:25 AM
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் தலா 3 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் தலா 2 பேர் தேர்வு செய்யப்பட்டு, தமிழகத்தில் சிறந்து விளங்கும் பள்ளியில் மேல்நிலைக் கல்வி படிக்க அரசு நிதியுதவி வழங்குகிறது.தேர்வு செய்யப்படும் மாணவ- மாணவிகளுக்கு கல்வி, பராமரிப்பு, விடுதிக் கட்டணம், சிறப்புப் பயிற்சிக் கட்டணம் என ஓராண்டுக்கு ரூ. 28 ஆயிரம் வீதம் 2 ஆண்டுகளுக்கு ரூ. 56 ஆயிரம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம். இவ்வாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT