Published : 27 May 2015 07:26 AM
Last Updated : 27 May 2015 07:26 AM

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: கணவன், மனைவி கைது

கொரட்டூரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்.

சென்னை கொரட்டூர் சீனிவாசபுரம் முதல் தெருவில் வசிப்பவர் குமார். இவரது மனைவி புஷ்பா. இருவரும் அந்த பகுதியில் பல ஆண்டுகளாக மாதாந்திர ஏலச்சீட்டு நடத்திவந்தனர்.

ஏலச்சீட்டில் பணம் போட்ட பலருக்கு முதிர்வு காலம் முடிந்த பின்னரும் அவர் கள் பணத்தை திருப்பிக் கொடுக்க வில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்கள் ரூ.27 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரிந்தது. அதைத் தொடர்ந்து குமார், புஷ்பா இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x