Published : 28 May 2015 07:44 AM
Last Updated : 28 May 2015 07:44 AM
தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் ஷேக் தாவூதின் தாயார் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி:
தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் எஸ்.ஷேக் தாவூத் தாயார் பாத்திமா மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்த முற்றேன்.
தாயாரை இழந்துவாடும் ஷேக் தாவூதுக்கும் அவரது குடும்பத்துக்கும் என் ஆழ்ந்த இரங்கலை யும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT