Published : 29 May 2015 10:23 AM
Last Updated : 29 May 2015 10:23 AM
தமிழகத்தில் பள்ளி வாகனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக 1,388 வாகனங் களுக்கு தகுதிச் சான்று மறுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மொத்தம் 37,107 வாகனங்கள் இயக்கப்படுகின் றன. இதில், பள்ளிகளுக்கு மட்டுமே 23,444 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த 11-ம் தேதி முதல் பள்ளி வாகனங்களில் வட்டார போக்குவரத்து அலுவல கம் சார்பில் ஆய்வு நடத்தப்பட் டன.
இது தொடர்பாக போக்கு வரத்து துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, “இதுவரை 14,597 வாகனங்களில் ஆய்வு கள் நடத்தப்பட்டுள்ளன. இதில், 13,209 பள்ளி வாகனங் களுக்கு தகுதிசான்று (எப்.சி) வழங்கப்பட்டுள்ளது. அவசர கதவு, தீயணைப்பு கருவிகள் இயங்காதது, படிகளில் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு குறைபாடு காரணமாக 1,388 வாகனங் களுக்கு தகுதிசான்று வழங்க வில்லை. குறைபாடுகளை சரிசெய்தால் வாகனங்களை இயக்க தகுதிசான்று அளிக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT