Published : 26 May 2015 07:06 AM
Last Updated : 26 May 2015 07:06 AM
சென்னையில் இருந்து இயக்கப் படும் கோவை மற்றும் பிருந்தா வன் விரைவு ரயில்கள் திருவள் ளூரில் நின்று செல்ல வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக திருவள்ளூர் மணவாளநகரைச் சேர்ந்த கே.கிருபாகரன் உள்ளிட்ட சில பயணிகள் ‘தி இந்து - உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு கூறிய தாவது:
திருவள்ளூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்கள் தினமும் பல் வேறு தேவைகளுக்காக வேலூருக் குச் சென்று வருகின்றனர். இவர்கள் திருவள்ளூரில் இருந்து தினமும் புறநகர் ரயில்களில் அரக்கோணத்துக்குச் சென்று, அங்கிருந்து கோவை, பிருந்தாவன் விரைவு ரயில்களைப் பிடித்து காட்பாடிக்குச் செல்கின்றனர்.
திருவள்ளூரில் இருந்து அரக்கோணத்துக்குச் செல்லும் மின்சார ரயில்கள் குறித்த நேரத் தில் இயக்கப்படாததால் அரக் கோணத்தில் மேற்கண்ட விரைவு ரயில்களை பலரும் தவற விடு கின்றனர்.
இதனால், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் தினமும் காலதாமதமாக செல்ல நேரிடு கிறது. எனவே கோவை மற்றும் பிருந்தாவன் விரைவு ரயில்கள் திருவள்ளூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, ரயில்வே அதி காரி ஒருவர் கூறும்போது, “கோவை, பிருந்தாவன் ரயில் களுக்கு ஏற்கெனவே பல ரயில் நிலையங்களில் நின்று செல்கின்றன.
எனினும், பொதுமக்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து திருவள்ளூரில் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT