Published : 26 May 2015 07:59 PM
Last Updated : 26 May 2015 07:59 PM

விபத்து, மாரடைப்பால் உயிரிழந்த காவல்துறையினர் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் உத்தரவு

உடல்நலக்குறைவு மற்றும் விபத்தில் உயிரிழந்த காவல்துறையினர் 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை மாவட்டம் மகாலிங்கபுரம் காவல்நிலைய சிறப்பு ஆய்வாளர் ஆர்.லட்சுமணன், சென்னை திருவான்மியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பி.மாசிலாமணி, கொரட்டூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஏ.சிலோர்மணி, மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பொருட்செல்வம் ஆகியோர் உடல் நலக்குறைவு மற்றும் மாரடைப்பால் மரணமடைந்தனர்.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பி.ராஜசேகர் ஏப்ரல் 29-ம் தேதி இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் 2-ம் நிலை காவலராக பணியாற்றிய ஆர்.நிர்மலா, கடந்த 3-ம் தேதி ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி இறந்தார்.

உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதுடன் அவர்கள் குடும்பங்களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியி்ல் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x