Published : 25 May 2015 10:54 AM
Last Updated : 25 May 2015 10:54 AM

பெண்ணை இரும்பு கம்பியால் அடித்து நகை, பணம் கொள்ளை

ஓட்டேரியில் பெண்ணை இரும்பு கம்பியால் அடித்து நகை, பணத்தை வீட்டு வேலைக்காரரே கொள்ளையடித்து சென்று விட்டார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அருகே ஓட்டேரி பிரிக்கிளின் சாலையில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் அசோக் ஜெயின்(45) போரூரில் ரியஸ் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா (43). இவரது வீட்டில் வேலை செய்வதற்காக பிஹாரைச் சேர்ந்த திலீப்(22) என்பவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சேர்ந்தார். நேற்று காலையில் அசோக் தனது மகன்களை அழைத்துக் கொண்டு போரூரில் உள்ள அலுவலகத்திற்கு சென்று விட்டார். வீட்டில் சங்கீதா, வேலைக்காரர் திலீப் ஆகியோர் மட்டும் இருந்தனர்.

அசோக் வீட்டில் நகை, பணம் நிறைய இருப்பதை தெரிந்து கொண்ட திலீப், அவற்றை கொள்ளையடிக்க சரியான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். நேற்று காலையில் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவே, ஏற்கனவே தயாராக வைத்திருந்த இரும்பு கம்பியால் சங்கீதாவின் தலை யில் ஓங்கி அடித்தார். இதில் ரத்தம் வெளிவந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார் சங்கீதா. பின்னர் பீரோவில் இருந்த 50 சவரன் நகை கள், ரூ.3 லட்சம் பணத்தை கொள்ளை யடித்த திலீப், வீட்டை வெளிப்புறமாக பூட்டி விட்டு தப்பினார்.

போரூர் சென்ற அசோக் பல முறை போன் செய்தும், மனைவி சங்கீதா போனை எடுக்கவில்லை. சந்தேகம் அடைந்த அசோக் வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந் தார் சங்கீதா. உடனே அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளித்து போரூரில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

தலைமைச் செயலக காலனி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசா ரணை நடத்தினார். திலிப் ரயில் மூலம் பிஹாருக்கு தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது. திலீப்பை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள் ளன. திலீப் தப்பி செல்லும் காட்சிகள் அடுக்குமாடி குடியிருப்பின் கண் காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன.

மூதாட்டி கொலை

சென்னை மணலியில் 70 வயது மூதாட்டியின் கழுத்தை தெரித்து கொலை செய்து 15 சவரன் நகையை கொள்ளையடித்துள்ளனர்.

மணலி சின்னசேக்காடு தேவராஜ் தெருவில் வசித்து வருபவர் வீரசேனி யம்மாள் (70). இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது கழுத்தை தெரித்து கொலை செய்து அவரிடம் இருந்த 15 சவரன் நகையை கொள்ளை யடித்துள்ளனர். மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x