Published : 30 May 2015 08:06 AM
Last Updated : 30 May 2015 08:06 AM

மதுவிலக்கு கோரி டாஸ்மாக் ஊழியர்கள் பிரச்சாரம், பேரணி

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக் கையாகும்.

இதை வலியுறுத்தியும், அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் டாஸ்மாக் பணியாளர்களை நியமிக்கக் கோரி யும், ஏஐடியுசியின் இணைப்பு சங்கமான தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் கடந்த 1-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பிரச்சாரப் பேரணியை நடத்தி வருகிறது

இதன் ஒருபகுதியாக திருவள் ளூரில் நேற்று பேரணி நடந்தது. திருவள்ளூர் பஸ் நிலையம் அருகே தொடங்கிய பேரணி தேரடி, பஜார் வீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாக சி.வி.நாயுடு சாலையில் நிறைவடைந்தது.

இதில் ஏஐடியுசியின் மாநில பொதுச் செயலாளர் மூர்த்தி, மாவட்ட பொதுச் செயலாளர் துரைசாமி, மாவட்ட செய லாளர் கஜேந்திரன் மற்றும் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தனசேகரன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x