Published : 27 May 2015 06:09 PM
Last Updated : 27 May 2015 06:09 PM
சென்னை மாங்காடு முத்துக்குமரன் கல்வி நிறுவனங்கள் தலைவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மருத்துவக் கல்லூரிக்கு போலி ஆவணங்களைக் காட்டி அங்கீகாரம் பெற்றதாக குற்றசாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை செய்யப்பட்டது. மருத்துவக் கல்லூரி மட்டுமின்றி, பாலிடெக்னிக் கல்லூரிக்கும் போலி ஆவணம் காட்டி அங்கீகாராம் பெற்றது தெரியவந்துள்ளது.
கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்த போது போலி ஆவணங்கள் காட்டி அங்கீகாரம் பெற்றது அம்பலமாகியுள்ளது. சி.எம்.டி.ஏ அனுமதி பெற்றதாக போலியாக ஆவணம் தயாரித்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதனால், முத்துக்குமரன் கல்வி நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன், அவரது மனைவி கோமதி, கல்வி நிறுவன மேலாளர் மனோகரன் ஆகிய மூவரையும் போலீஸ் கைது செய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT