Published : 30 May 2015 08:43 AM
Last Updated : 30 May 2015 08:43 AM

தேர்தலில் போட்டியிட ஆதரவு கோரி கருணாநிதி, ஸ்டாலின், விஜயகாந்துடன் டிராஃபிக் ராமசாமி சந்திப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட் டோரை நேற்று சந்தித்து ஆதரவு கோரினார்.

ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜுன் 27-ம் தேதி நடக்கவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடவுள்ளார். இந்த தேர்தலை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. தேமுதிக, காங் கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுவது தொடர்பாக இது வரை எந்த முடிவையும் எடுக்க வில்லை.

இந்த சூழலில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி ஆர்.கே நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள் ளார். திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரை நேற்று சந்தித்த டிராஃபிக் ராமசாமி, இடைத்தேர்த லில் தனக்கு ஆதரவளிக்கும்படி கோரினார்.

இதுதொடர்பாக ‘தி இந்து’ விடம் டிராஃபிக் ராமசாமி கூறிய தாவது:

ஆர்.கே.நகர் தொகுதியில் நான் போட்டியிடவுள்ளேன். இந்த தேர்தலை திமுக புறக்கணித்துள் ளது. பிரதான எதிர்க்கட்சியான தேமுதிக தனது முடிவை அறிவிக்க வில்லை. இந்த சூழலில்தான் நான் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரை சந்தித்து பேசினேன். அவர்கள் அனைவரும் எனக்கு சாதகமான பதிலை சொல்வார்கள் என்று நினைக்கிறேன். அதற்கான அறிகுறிகள் தெரிந்தன.

இவ்வாறு அவர் கூறினார்.

கருணாநிதி நம்பிக்கை

டிராஃபிக் ராமசாமியுடனான சந்திப்புக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, “டிராஃபிக் ராமசாமியை ஆதரிப்பது தொடர் பாக இன்னும் முடிவு செய்ய வில்லை. திமுக பொதுச்செய லாளர் அன்பழகன், பொரு ளாளர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசித்த பிறகே முடிவெடுக்க முடியும்.

திமுக ஆட்சியின்போது தேர்தல் ஆணையம் எங்களுக்கு ஆதரவாக இருந்ததில்லை. ஆதரவாக இருக்க வேண்டுமென்றும் திமுக ஆட்சி நினைத்ததில்லை. சில எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. இடைத் தேர்தலை போலவே, சட்டப் பேரவை தேர்தலிலும் ஒருமித்த கருத்து ஏற்படும்” என்றார்.

ஆர்.கே.நகரில் மற்ற கட்சிகளுக்கு ஆதரவளிப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, “நாங்கள் யாருக்கு ஆதரவு என்று ஏலம் விடுகின்ற நிலையில் இந்த விவகாரம் இல்லை” என்று கருணாநிதி பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x