Published : 28 May 2015 08:20 AM
Last Updated : 28 May 2015 08:20 AM

3 மாற்றுத்திறனாளி குழந்தைகளை கொன்று தாய், தந்தை தற்கொலை: பழநி அருகே துயரச் சம்பவம்

பழநி அருகே மரிக்கிழம்பு மார்க்கண்டேய வலசு கிராமத் தைச் சேர்ந்தவர் விவசாயி முரு கேசன்(47). இவரது மனைவி கிருஷ்ணவேணி(40). இவர்களுக்கு தேன்மொழி(18), வசந்தி(16) ஆகிய 2 மகள்களும், வசந்தகுமார்(14) என்ற மகனும் இருந்தனர்.

தனது 10 ஏக்கர் விவசாயத் தோட்டத்தில் முருகேசன் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர்களுடைய மூத்த மகள் தேன் மொழிக்கு மாலைக்கண் நோய். பிளஸ் 2 படித்த 2-வது மகள் வசந்தி கால் பாதிப்புடன் மனநிலையும் சரியில்லாதவர். 3-வது மகன் வசந்தகுமார் 8-ம் வகுப்பு படிக்கும் போது விபத்தில் கால் முறிந்து 3 ஆண்டுகளாக பள்ளிக்குச் செல்லவில்லை. 3 குழந்தைகளும் மாற்றுத்திறனாளிகளாகி விட்டனர். மூவருக்கும் பல மருத்துவமனைகளில் சிகிச்சை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை இவர்கள் தோட்டத்துக்கு குளிக்கச் சென்ற சிலர், முருகேசன் வீடு திறக் காமல் உள்புறமாக பூட்டிக் கிடந் ததை பார்த்து ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். வீட்டினுள் முரு கேசனும், அவரது மனைவியும் தூக்கில் தொங்கிய நிலையிலும், மகள்களும் மகனும் படுக்கையில் இறந்து கிடந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த கீரனூர் போலீஸார் வீட்டை உடைத்து 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக் காக பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், முருகேசனும் அவரது மனைவியும் மகள் களுக்கும் மகனுக்கும் உணவில் விஷம் வைத்து கொன்றுவிட்டு தாங்களும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

பள்ளியில் இடம் மறுத்ததால் விரக்தியா?

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலர் பகத்சிங் கூறியதாவது: திருமண வயதில் இருந்த தேன்மொழிக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர். மாலைக்கண் நோயால் அவருக்குத் திருமணம் தள்ளிப்போனது. 2-வது மகள் வசந்தி நடக்க முடியாததால், அவரை பிளஸ் 2-க்கு மேல் படிக்க வைக்க முடியவில்லை. 3 ஆண்டுகளாக வீட்டில் இருந்த மகன் வசந்தகுமாரை, இந்த ஆண்டு 9-ம் வகுப்பில் சேர்க்க பழநியில் சில பள்ளிகளை அணுகியுள்ளனர். ஆனால் அவர்கள் பள்ளியில் சேர்க்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் வசதி இருந்தும் குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிட்டதால் முருகேசனும், அவரது மனைவியும் மனமுடைந்து 3 குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தாங் களும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x