Published : 30 May 2015 08:20 AM
Last Updated : 30 May 2015 08:20 AM

விமான நிலையத்தில் 2.5 கிலோ தங்கம் சிக்கியது

திருச்சி விமான நிலைய கழிப்பறையில் 2.5 கிலோ தங்கம் சிக்கியது. இதுகுறித்து விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மலேசியாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஏர் ஆசியா விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர், விமான நிலையத்தில் உள்ள கழிப்பறை யைத் துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்யச் சென்றனர். அப்போது, அங்கு 3 பொட்டலங் கள் கிடந்தன. அவற்றில், தலா 100 கிராம் எடை கொண்ட 25 தங்கக் கட்டிகள் இருந்தன. மொத் தம் 2.5 கிலோ எடை கொண்ட அந்த தங்கக் கட்டிகளின் மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x