Published : 26 May 2015 07:46 AM
Last Updated : 26 May 2015 07:46 AM

கருணாநிதியுடன் பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு

திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று திடீரென சந்தித்துப் பேசினார். மாலை 6.30 மணிக்கு கோபாலபுரம் இல்லத்துக்கு வந்த பொன்.ராதாகிருஷ்ணன், 10 நிமிடங்கள் கருணாநிதியுடன் பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘‘கருணாநிதியின் மூத்த சகோதரி சண்முக சுந்தரத்தம்மாள் சமீபத்தில் காலமானார். அவரது மறைவுக்கு துக்கம் விசாரிக்கவே கருணாநிதியை சந்தித்தேன். அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x