Published : 30 May 2015 07:58 AM
Last Updated : 30 May 2015 07:58 AM

2 பெண்களிடம் 16 பவுன் செயின் பறிப்பு

சென்னை திருவொற்றியூர் ஜெ.ஜெ.நகர் 7 வது தெருவில் வசிப்பவர் சோமசுந்தரம். இவரது மனைவி சரஸ்வதி. இருவரும் முகப்பேரில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் நேற்று முன் தினம் இரவு வீட்டுக்கு திரும் பிக் கொண்டிருந்தனர். கொசப்பூர் சந்திப்பு அருகே வந்துகொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் சரஸ்வதி அணிந்திருந்த 7 பவுன் செயினைப் பறித்து தப்பி ஓடினர்.

அம்பத்தூர் விஜய லட்சுமி புரத்தில் வசிப்பவர் ராமநாதன். இவரது மனைவி நிர்மலா (48). இவர் பாடியநல்லூர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு, இவர் காய்கறி சந்தைக்கு சென்று வீட்டுக்கு திரும்பிக்கொண் டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், நிர்மலா மீது மோட்டார் சைக்கிளில் மோதினர். இதில் நிலைகுலைந்து நிர்மலா கீழே விழுந்தார். அப்போது அவர்கள் நிர்மலாவின் கழுத்தில் இருந்த 9 பவுன் செயினை பறித்துச் சென்றனர். போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x