Published : 27 May 2015 07:49 AM
Last Updated : 27 May 2015 07:49 AM
சேஷாசலம் வனப்பகுதியில் ஆந்திர போலீஸாரால், தமிழக கூலிதொழிலாளர்கள் 20 பேர், ஏப்ரல் 7-ம் தேதி சுட்டுக்கொல் லப்பட்ட வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை ஆந்திர மாநில அரசு அமைத் துள்ளது. ஐபிஎஸ் அதிகாரி ரவி சங்கர அய்யனார் ஐஜி தலைமை யிலான குழு, திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் விசாரணையைத் தொடங்கியது.
சுட்டுக் கொல்லப்பட்ட கால சமுத்திரம் கிராமம் பழனி, முரு காப்பாடி கிராமம் மூர்த்தி, முனு சாமி, காந்திநகர் மகேந்திரன், வேட்டகிரிபாளையம் பெருமாள், சசிகுமார், முருகன் ஆகிய 7 பேர் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், ‘பிரேதப் பரிசோதனைக்கு பிறகு ஒப்படைக்கப்பட்டவர்களின் உடல்களில் வெட்டுக் காயம் மற்றும் தீக்காயங்கள்’ இருந்த தாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சிறப்பு புலனாய் வுக் குழுவின் 2-வது நாள் விசாரணை, ஜவ்வாதுமலையில் நேற்று நடைபெற்றது. மேல்குப் சனாவூர் கிராமம் வெள்ளிமுத்து, சின்னசாமி, கோவிந்தசாமி, ராஜேந்திரன், மேல்கனவாவூர் கிராமம் பன்னீர்செல்வம் ஆகி யோரது குடும்பத்தினரிடம் ஐஜி ரவிசங்கர் அய்யனார் தலைமை யிலான குழு விசாரணை நடத்தி யது. அப்போது அவர்களிடம் கொல்லப்பட்ட நபர்கள், வீட்டில் இருந்து புறப்பட்ட தேதி, அவர்கள் தொடர்புகொண்டு பேசிய கால நேரம், அவர்கள் செய்த தொழில் போன்ற தகவல்களை சேகரித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT