Published : 27 May 2015 07:28 AM
Last Updated : 27 May 2015 07:28 AM

அரசியல் கட்சி பிரமுகரை கொலை செய்துவிட்டு கொலையாளிகள் தப்பி சென்ற கார் மோதி புகைப்பட நிபுணர் கவலைக்கிடம்

சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் மனோகரன் (49). புகைப்பட நிபுணர். இவர் தனது உதவியாளர் சதீஷுடன் கடந்த 20-ம் தேதி மடிப்பாக்கம் பகுதியில் ஒரு விசேஷத்துக்கு புகைப்படம் எடுப்பதற்காக பைக்கில் சென்றார். மனோகரன் பைக்கை ஓட்ட, சதீஷ் பின்னால் அமர்ந்திருந்தார்.

மேடவாக்கம் பிரதான சாலையில் பைக் சென்றபோது, எதிரே வேகமாக வந்த ஒரு கார், அதன் மீது மோதியது. இதில் இருவரும் அருகே இருந்த பள்ளத்தில் விழுந்தனர். இந்த விபத்தில் மனோகரனுக்கு இடுப்பு, தொடை, மூட்டு ஆகிய பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சதீஷுக்கும் காயங்கள் ஏற்பட் டன. அருகே இருந்தவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

விசாரணையில் மடிப்பாக் கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெற்றிச்செல்வனை கொலை செய்தவர்கள் தங்கள் காரை வேகமாக ஓட்டிக்கொண்டு வந்தபோது அது மனோகரனின் பைக் மீது மோதியது தெரியவந்தது. மனோகரனுக்கு இதுவரை 4 அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. மேற்கொண்டு சிகிச்சை அளிக்க பணமில்லாமல் அவரது குடும்பம் தவித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x