Published : 28 May 2015 08:15 AM
Last Updated : 28 May 2015 08:15 AM

பண மோசடி வழக்கு: விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் நீதிமன்றத்தில் ஆஜர்

‘நரசிம்மா’ பட விநியோகஸ்தருக்கு பணத்தைத் திருப்பித் தராமல் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக, திரு வில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனரும், அக்கட்சியின் இளை ஞரணி செயலாளருமான எல்.கே. சுதீஷ் நேற்று ஆஜரானார்.

விருதுநகர் மாவட்டம், திரு வில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் மாரி யம்மாள். கடந்த 2001-ம் ஆண்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடித்த ‘நரசிம்மா’ படத்துக்கு, நெல்லை மாவட்ட விநியோக உரிமையை பெற்றிருந்தார். இதில் இவருக்கு ரூ. 26 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இத்தொகையை விஜயகாந்த் மற்றும் சுதீஷிடம் கேட்டபோது, அவர்கள் தர மறுத்த தாகக் கூறப்படுகிறது.

அதையடுத்து, திருவில்லி புத்தூர் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் மாரியம்மாள் வழக் குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விஜயகாந்த் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்து விடுவித்தது.

இந்நிலையில், திருவில்லி புத்தூரில் நடைபெற்று வரும் வழக்கின் விசாரணைக்கு சுதீஷ் ஆஜர் ஆகாததால், நீதிமன்றம் கடந்த 10.4.15-ம் தேதி பிடி ஆணை பிறப்பித்தது. அதையடுத்து, நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது சுதீஷ் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி பசும்பொன் சண்முகையா விசார ணையை ஜூன் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x