Published : 28 May 2015 07:53 AM
Last Updated : 28 May 2015 07:53 AM

பெண்ணை கிண்டல் செய்த 3 பேர் கைது

கூடுவாஞ்சேரி அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணை, கிண்டல் செய்த 3 பேரை போலீஸார் ‘பெண்கள் வன்கொடுமை சட்டத்தில்’ கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், நந்திவரம் கூடுவாஞ்சேரி அடுத்த காந்திநகரில் வசித்து வரும் பெண் ஒருவர், பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, கூடுவாஞ் சேரியைச் சேர்ந்த இளங்கோ (31), மோகன்ராஜ் (29), மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த வெங்கடாச்சலம் (33) ஆகிய 3 பேர் அவரை தகாத வார்த்தைகளால் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அந்த பெண் அளித்த புகாரின் பேரில், கூடுவாஞ்சேரி போலீஸார், ‘பெண்கள் வன்கொடுமை சட்டத்தின்’ கீழ், 3 பேரையும் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x