Published : 27 May 2015 05:26 PM
Last Updated : 27 May 2015 05:26 PM

பி.இ. சேர்க்கை விண்ணப்ப விநியோகம் மே 29-ல் நிறைவு

தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே 29-ம் தேதி நிறைவடைகிறது.

இதுகுறித்து சென்னையில் பொறியியல் சேர்க்கைக்கான செயலாளர் ரேமண்ட் உத்தரியராஜ் செய்தியாளர்களிடம் பேசினார்.

''கடந்த ஆண்டு 2 லட்சத்து 15 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன. தமிழகம் முழுவதும் 60 மையங்களில் 2 லட்சம் பொறியியல் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை பூர்த்தி செய்யப்பட்ட ஒரு லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

570 கல்லூரிகளில் உள்ள 1,80,000 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்'' என்று ரேமண்ட் உத்தரியராஜ் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x