Published : 29 May 2015 09:00 AM
Last Updated : 29 May 2015 09:00 AM

வியாபாரியின் வீட்டில் 15 பவுன் திருட்டு

சென்னை சூளை ஆனந்த கிருஷ்ணன் தெருவில் வாடகை வீட்டில் வசிப்பவர் சிவக்குமார்(45). டைல்ஸ் வியாபாரி. இவர் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றிருந்தார். நேற்று காலை வீட்டின் உரிமையாளர் சோரிசிங் (60) அங்கு வந்தபோது சிவக்குமார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அவர் உடனடியாக போலீஸாருக்கும், சிவக்குமாருக்கும் தகவல் தெரிவித் தார்.

சிவக்குமாரின் வீட்டில் உள்ள பீரோவை உடைத்த திருடர்கள், 15 பவுன் நகைகள், ரூ. 40 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து வேப்பேரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x