Published : 28 May 2015 11:12 AM
Last Updated : 28 May 2015 11:12 AM
தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்றுக் கொண்டுள்ள நிலையில் அவருக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், "நீங்கள் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டதற்கு வாழ்த்துகள். உங்கள் தலைமையின் கீழ் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் என நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து கடந்த 11-ம் தேதி ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த 23-ம் தேதி ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT